சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக சதவீதம் வாக்கு பதிவு இருக்குமென,நீண்ட வரிசையை பார்த்தாலே தெரிகிறது.
நடக்கமுடியாமல் வாக்கிங்ஸ்டிக்கை வைத்து கொண்டு வந்து ஒட்டு போட்ட பெரியவரையும், ஆஸ்துமா நோயால் அவதிப்படும் கூன் விழுந்த மூதட்டியையும்,ஸ்ட்ரெச்சரிலே வந்து ஒட்டு போட்டு சென்ற ஒரு 19 வயது மதிக்கத்தக்க நோய்வாய்பட்ட சிறுவனையும் பார்க்கும் போது ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கை 1000 மடங்காக அதிகரிக்கிதது.
இதே அற்பணிப்பையும்,உத்வேகத்தையும் அணைத்து மக்களும் கொண்டு இருந்தால் எந்த ஒரு அரசியில்வாதியும் மக்களை ஏமாற்றவே பயப்படுவான்.
அந்த மறுமலர்ச்சி சீக்கிரம் வருமென நம்புவோம்.வாழ்க ஜனநாயகம்!!!
பி.கு:
நீண்ட வரிசையில் நின்றால் கால்வலிக்கும் என்று நினைப்பவர்களும், இவ்வளவு வெயில்ல எப்பிடி நிக்கிறது என்று யோசிப்பவர்களும், சோம்பேறிகளும் இவர்களை பார்த்தாவது திருந்துங்கள்.